ரகசியம்
ஏன்
இத்தனை
பயம் கொள்ளச் செய்கிறது
இந்த உடல் ....
உஷ்ணம்
விரவிப் பரவி
கருகச் செய்யும்
கணத்தில்
நீர் ஊற்றி ஊற்றி
அணைத்து
தடுக்கிறேன்
ஏனோ
அதிகதிகமாக
ஒளிகின்றேன்
எதிலோ
நகர நகர
உதிர்ந்து விழுகின்றது
உடல்
அதில் உடைந்து தெறிக்கிறது
நான் எனும் நான்
சிதறிய கூறுகளை சேகரித்து இணைக்கின்றேன்
ஒட்டப்பட்ட உதிர்வுகளின் விரிசல்கள்
யாருக்கும் தெரியக்கூடாது என்றே
வெவ்வேறு வண்ணங்களை
படரச்செய்கின்றேன்.
அடர் வண்ணங்களில்
விரிசல்கள் தெரியவில்லை
மகிழ்ச்சி இதுவரை ...
ஆனால்
யாரும் பார்த்தால் ???
உற்றுப்பார்க்கும்
கண்களின் ஊடுருவலில்
ரகசியம் தெரிந்தால் ?
என்செய்வேன் ?
Comments
Post a Comment