Posts

Showing posts from February, 2017

அவளில் அவள்கள்

Image
திரை-கதை-தொடர் -பகுதி 1  அன்று - கார்லோட்டா . பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள்.   ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை . ஒருநாள் அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் . இன்று Madeleine தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் . அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள். கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் . அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் . ஒரு திரைக்கதையின் மிகவும் சிறு பகுத

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....

Image
''உயிரே''   காதல் கதைகள்- பகுதி 1 நான் தேநீர் விரும்பியல்ல. தேநீர் போலவே எனக்கு காதலும்  :) காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன. மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் .... ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே ) ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும். உயிரேயின் அரசியல் தவிர்த்து அதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை உலகத்திலேயே மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது. நான் ஆரம்பிக்கிறேன்  :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ? ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை எல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன். எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன். எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம் அன்றைய ஷாருக்கினுடையது. அசட்டை ந

சட்டென நனைந்தது நெஞ்சம்

Image
திரைப்பட வகுப்பறை ... ஏதோ ஒரு பேச்சின் நீட்சியில் வந்தது  கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட பெயர் அங்கிருந்த அனைவருமே பிடிக்கவில்லை/ பிடித்த படம் என்ற வரையறைக்குள் அடக்கிட முனைந்த தருணம் என் பட்டியல்களில்  கன்னத்தில் முத்தமிட்டால் இல்லை என்றாலும் படத்தில் இடம்பெறும் கிட்டத்தட்ட 14 நிமிஷ காட்சியை அதில் ஒலிக்கும் பாடலை மட்டும் எப்போதும் ரசிக்க தவறாதவள் நான் காதல்- மணிரத்னம் தன் படத்தில் அழகியல்- யதார்த்தம் என்று 2 பக்கங்களையும் இணைக்க முற்பட்ட கட்டம். மாதவன் எழுத்தாளன் எழுத்தின் வழியே அவனை, அவன் அழகை ரசிக்கும் சிம்ரன். ஈர்ப்பு -காதல்- அன்பு என்று எல்லாம் இருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் தருவாயில் குழந்தைக்காக சிம்ரனை திருமணம் செய்ய மாதவன் கேட்க, அது ஏன்? அப்படி ஒரு காரணம் ஏன்? காதலை விட காரணம்தான் தீர்மானித்ததா தன்னை, என்று சிம்ரன் கேட்கும் காட்சி எந்த வார்த்தையுமே அவளை சமாதனப்படுத்த முடியாதென்று உணர்பவன் அவளது கோபத்தை, குழப்பத்தை கட்டியணைத்து தீர்க்க முற்படுகையில் அவளுக்கு சந்தோஷ வார்த்தைகள் கண்ணீராக உருமாறி தெறிக்க முதன் முதலில் அந்த அருகா