நிறம் மாறும் மீன்கள் விலங்குகளில் நிறம் மாறுபவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னை பிற விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி பற்றி நாம் அறிவோம். செடிகொடிக்குள் நின்றால் தன் உடலை பச்சை, மஞ்சளாகவும், மரப்பட்டையில் நிற்கும்போது கருப்பும், காபி வண்ணமும் கலந்ததுபோல உடலின் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடும். ஆனால் இவை தரையில் நிறம் மாறுபவை கடலில் நிறம் மாறும் மீன்கள் பற்றி அறிவிர்களா? கடலில் வாழும் மீன் இனங்களில் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நிறம் மாறும் மீன்களில் முக்கியமானது வேதாள மீன்கள் மற்றும் இலை மீன்கள். இவை இரண்டும் மிக விந்தையான உடலமைப்பைப் பெற்ற மீன்கள். எதிரி மீன்களிடம் இருந்து தப்பிக்க சிறப்பு அமைப்புகளைப்பெற்றுள்ள இம்மீன்கள், பச்சோந்திகளைப் போல நிறம் மாறக்கூடியவை. இவற்றை மீன் என்று யாரும் எளிதில் கண்டுபிடித்து விட முடியாத அளவில் தன் தோற்றத்தையும் நிறத்தையும் மாற்றக்கூடியவை. இலை மீன், இலை போன்ற வடிவத்திலும், நிறத்திலும் காணப்படும். இலை போன்ற உடலமைப்பையும்,...
Popular posts from this blog
தர்பூசணி தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் C அதிகம் உள்ளது. நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு ஐஸ் கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும். பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும். தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்...
ரம்புட்டான் எத்தனையோ பழங்கள் இருந்த போதும் ரம்புட்டான் மட்டும் வித்தியாசமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழமரத்தாவரம். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் , தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதேபோன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் . July மாதம் இந்த பழ சீசன் ஆகும். அந்த நேரத்தில் மட்டு...

Comments
Post a Comment