The Red Balloon சிறு வயதில் பலூன்கள் மேல் எனக்கு அளவிடமுடியாத ஆசை இருந்தது. அதே ஆசை இன்று இருக்கிறதா என்றால் பதில் சொல்லத்தெரியவில்லை பலூன்களைப்பார்க்கும் போது ஒரு இனம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் விடும் பாலூன்களோடு சேர்த்து எனது சிறு பராயமும் தொலைந்துவிட்டது. தொலைந்து போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்தது ஒரு குறும்படம் "The Red Balloon" பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூனை காண்கிறான் சிவப்பு நிறத்தில் பெரிதாய் இருக்கும் அந்த பலூனை பார்க்க எனக்கே ஆசை வருகிறது என்றால் , அந்த சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும் ? பலூனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல தொடங்குகிறான். பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர் . பலூனை பிரிய மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்குகின்றான் . பலூனை பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடியாத காரணத்தால் பள்ளிப்பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு பள்ளி முடிந்த
Popular posts from this blog
The Clue:4th Period Mystery
இலக்கிய வகுப்பு ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் குறிபெடுத்துக் கொள்கின்றார்கள் .அந்த மாணவர்கள் கூட்டத்தில் ஒருவன் ஜங் ஹூன் (Jung-hoon) .வகுப்பில் சிறந்த மாணவனாக நற்பெயர் கொண்டவன் . எழுதும் போது எதேச்சையாக முன்னிருக்கையைப் பார்கிறான் . டா ஜங் (Da-jung) எப்போதும் நீளக் கூந்தலை விரித்துவிட்டிருபாள் அதனால் curtain என்றே அனைவரும் அழைப்பார்கள் . பாடப்புத்தகத்திற்குள் குற்றங்கள் தொடர்பான புத்தகத்தை மறைத்து வைத்து வாசிக்கிறாள் .அவளது மேஜையில் இருப்பது எல்லாமே கிரைம் தொடர்பான புத்தகங்கள் . அவளது செய்கையை பார்த்துவிட்டு மீண்டும் பாடத்தை கவனிக்க தொடங்குகிறான் ஜங். ஒருவனை விஷம் வைத்து எப்படி கொல்லலாம் என்பதை பற்றி curtain மனதிற்குள் வாசிக்கையில் திடிரென்று பின் இருக்கையில் சத்தம் கேட்கிறது . பின்வரிசை மாணவன் வாயில் நுரை தள்ளி துடிதுடிக்க அனைவரும் பதறுகிறார்கள் .ஜங் ஆம்புலன்சை அழைக்க முயல, டா அந்த மாணவனை தொடர்ந்து தனது கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறாள் . சில நாட்களுக்கு பின்பு- மாணவன் உயிர் பிழைக்கிறான் .அந்த மாணவன் உட்பட எல்லோரும் food poison என்று நம்ப curtai
மருதாணியின் மகிமை இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது.பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வ
Comments
Post a Comment