அந்த நிமிடம்



சட்டென்று
கடந்து போன நிமிடங்களில்
தொலைந்த வார்த்தையை
நினைவூட்ட தடுக்கிறது ஏதோ ஒன்று .

புகைப்படத்தில் முகம் பதிக்க முன்னர்
அசலான இந்த சலன முகம் யாருக்கு பிடிக்கும் ?

தயக்கமும் கேள்வியும்
மீளவும் தொடர்ந்த போது
என்ன சொல்லியிருப்பேன்
நான் ?

ம்.....நினைவுகளின் நீட்சியில்
ஒளிந்து கொண்ட வார்த்தையை
கண்டெடுக்க ஒரு கணம் கொடு .

மீண்டும்
தொலைந்த வார்தைகளில்
ஒளிந்து கொள்ள தயாராகிறேன்.

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்