வான் தொட்டு விளையாடும்
என் சிறகுகளின் ஆசை!
சிறகில் பிணைக்கப்பட்ட என் கூடுகள்
சிறைப்போலவே...
வெண்சிறகிற்குள் ஒளிந்திருக்கும்
கருமையும் கண்ணீரும் படர்ந்த கனவுகள்
கரைக்கமுடியாமல் கடக்கிறது காலஓடைகள்
என் சிறகுகள் உருவில் சிலுவைகள்
இது வரமாய் பெற்ற சாபம் !
இருக்கவும் மனமற்று பறக்கவும் வழியற்று
வாழ்கிறேன் நானும் உன்னைப் போலவே ...
Comments
Post a Comment