A Millionaire's first love... நம் வாழ்வில் எத்தனையோ பேர் நம்முடன் வாழ்கிறார்கள் அனைவரையும் நாம் நேசிப்பதில்லை . அம்மா,அப்பா,சகோதர்கள்,நண்பர்கள்,வாழ்க்கை துணை இப்படி நம் நேசிப்பு வட்டம் மிகச் சிறியதே ... இந்த சிறிய நேசிப்பு வட்டத்தில் வாழ்பவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் . அவர்கள் அருகிருப்பை அதிகம் விரும்புகிறோம் .அவர்களுடன் வாழ் நாட்களை அனுபவிக்க எண்ணுகிறோம். பிடித்தவர்களுடன் பிடித்த வாழ்க்கை எவ்வளவு அருமையானது ? ஆனால் நம் நேசத்துக்குரியவர் நம்மை விட்டு பிரியப்போகிறார் அதுவும் நிரந்தரமாக உலகை விட்டு போகப்போகிறார் என்று அறிகையில் எப்படி இருக்கும் ? அவரின் பிரிவு வலி என்றால், பிரிவு நிகழப்போகிறது என்பதை அறிந்து அவருடன் வாழும் வாழ்க்கை அதீத வலியை தரும். அந்த வலியோடு கடக்கும் நாட்கள் மிக கொடுமை . அந்த வலிதரும் உறவு நம் காதலாக இருந்தால் ... அந்த காதலின் கதைதான் A millionaire's first love ஜே க்யூன் ( Kang Jae-Kyung) மிகப் பெரிய கோடீஸ்வரன் .சிறுவயதில் பெற்றோரை இழந்து பணத்தை மட்டும் ஒரே துணையாக கொண்டதால் முரட்டுத்தனம் கொண்டவனாகவும் திமிர்
Popular posts from this blog
The Clue:4th Period Mystery
இலக்கிய வகுப்பு ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் குறிபெடுத்துக் கொள்கின்றார்கள் .அந்த மாணவர்கள் கூட்டத்தில் ஒருவன் ஜங் ஹூன் (Jung-hoon) .வகுப்பில் சிறந்த மாணவனாக நற்பெயர் கொண்டவன் . எழுதும் போது எதேச்சையாக முன்னிருக்கையைப் பார்கிறான் . டா ஜங் (Da-jung) எப்போதும் நீளக் கூந்தலை விரித்துவிட்டிருபாள் அதனால் curtain என்றே அனைவரும் அழைப்பார்கள் . பாடப்புத்தகத்திற்குள் குற்றங்கள் தொடர்பான புத்தகத்தை மறைத்து வைத்து வாசிக்கிறாள் .அவளது மேஜையில் இருப்பது எல்லாமே கிரைம் தொடர்பான புத்தகங்கள் . அவளது செய்கையை பார்த்துவிட்டு மீண்டும் பாடத்தை கவனிக்க தொடங்குகிறான் ஜங். ஒருவனை விஷம் வைத்து எப்படி கொல்லலாம் என்பதை பற்றி curtain மனதிற்குள் வாசிக்கையில் திடிரென்று பின் இருக்கையில் சத்தம் கேட்கிறது . பின்வரிசை மாணவன் வாயில் நுரை தள்ளி துடிதுடிக்க அனைவரும் பதறுகிறார்கள் .ஜங் ஆம்புலன்சை அழைக்க முயல, டா அந்த மாணவனை தொடர்ந்து தனது கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறாள் . சில நாட்களுக்கு பின்பு- மாணவன் உயிர் பிழைக்கிறான் .அந்த மாணவன் உட்பட எல்லோரும் food poison என்று நம்ப curtai
Balut Country
கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் Balut Country படம் முடிந்த பின்னர் நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது . கலந்துரையாடலின் போது இயக்குனரிடம் ''உங்கள் படம் மெதுவாக உள்ளது; திரைப்படங்களை மெதுவாக எடுக்ககூடாது சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் ''என்று ஆரம்பித்து ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற ரீதியில் வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ஒருவர். இயக்குனர் Paul Sta. Ana சிரித்துக்கொண்டே'' இது மெலோ டிராமா வகையை சேர்ந்த படம் .அத்தோடு காட்சிகளை மிக மெதுவாக அமைத்ததன் காரணம் அந்த கதாபாத்திரத்தின் இருப்பையும் இயல்பையும் உணர்த்ததான் ....'' என்று சொல்லி விளக்க முற்பட்டும் அது முடியவில்லை. ஒரு கட்டத்தில் ''உங்களுக்கு பொழுது போக்கை ஏற்படுத்துவதற்கு, நான் பாலிவுட் படம் எடுக்கவில்லை; அதேவேளை நான் மோசமான படமும் எடுக்கவில்லை'' என்று முடித்துகொண்டார் . அரங்கை விட்டு வெளியே வந்த பின்னர் இயக்குனரை சந்தித்தேன். ''மெதுவாக நகர்வதாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை காரணம் நான் இதைவிட மெதுவாக நகரும் படங்களை பார்த்துள்ளேன் ....&
Comments
Post a Comment