A Millionaire's first love... நம் வாழ்வில் எத்தனையோ பேர் நம்முடன் வாழ்கிறார்கள் அனைவரையும் நாம் நேசிப்பதில்லை . அம்மா,அப்பா,சகோதர்கள்,நண்பர்கள்,வாழ்க்கை துணை இப்படி நம் நேசிப்பு வட்டம் மிகச் சிறியதே ... இந்த சிறிய நேசிப்பு வட்டத்தில் வாழ்பவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் . அவர்கள் அருகிருப்பை அதிகம் விரும்புகிறோம் .அவர்களுடன் வாழ் நாட்களை அனுபவிக்க எண்ணுகிறோம். பிடித்தவர்களுடன் பிடித்த வாழ்க்கை எவ்வளவு அருமையானது ? ஆனால் நம் நேசத்துக்குரியவர் நம்மை விட்டு பிரியப்போகிறார் அதுவும் நிரந்தரமாக உலகை விட்டு போகப்போகிறார் என்று அறிகையில் எப்படி இருக்கும் ? அவரின் பிரிவு வலி என்றால், பிரிவு நிகழப்போகிறது என்பதை அறிந்து அவருடன் வாழும் வாழ்க்கை அதீத வலியை தரும். அந்த வலியோடு கடக்கும் நாட்கள் மிக கொடுமை . அந்த வலிதரும் உறவு நம் காதலாக இருந்தால் ... அந்த காதலின் கதைதான் A millionaire's first love ஜே க்யூன் ( Kang Jae-Kyung) மிகப் பெரிய கோடீஸ்வரன் .சிறுவயதில் பெற்றோரை இழந்து பணத்தை மட்டும் ஒரே துணையாக கொண்டதால் முரட்டுத்தனம் கொண்டவனாகவும் திமிர்
Popular posts from this blog
ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! எத்தனை கண்ணீர் வாழ்க்கையில் வந்து போனாலும் ஓர் கண்ணீர்க்கு மட்டும் ஒப்பில்லா உயர்வுண்டு உலகில் -ஏனெனில் அதுமட்டுமே ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் ! என் கண்முன்னே தெரியும் உலகம் இன்று மட்டும் ஏதோ விசித்திரமாய் …. சூன்யப் புள்ளிகளில் சுற்றி திரியும் மனதில் மெல்ல எழுகின்றது பயத்தின் புகை மடல்கள் மரண முடிவும் ஜீவ தொடர்ச்சியும் நிலைபெறும் போது ஓர் சுழற்சியில் சிக்கி தவிக்கிறது மனது சிற்றூசிகளை கொட்டிக்குத்தியத்தைப்போல வயிற்றில் ஓர் பிடிப்பு முளைக்கத்துடிகும் விதை நேரம் பார்க்கும் பொழுதாய் நான் தாயாகும் இந்த பொழுது உடல்வலி ....மன வலி ..எல்லாம் கடந்து நினைவுகள் நீள்கிறது என் தாயை நோக்கி ..... என் விழிகளுக்குள்ளே வலிகளைத்தாண்டி அவள் முகசுருக்கங்களில் கனவுகளையும் கவலைகளையும் தேக்கி வைத்து ஏக்கத்துடன் பார்த்த பார்வைகள் எதுவும் பேசாமல் மௌனங்கலாலேயே என் மனம் படித்தவளின் குரல் என் காதுகளின் அருகாமையில் ... என் கண்ணே என்னவளே என் உயிரில் உதித்த உறவே .... அழுத்தத்தை உதறி அவிழும் கம்பி சுருலென எழும் என் தாய்மையின் நினைவ
சூரியகாந்தி பூ உலகத்தில் எத்தனை பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு நிகர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பூக்களுக்கு அழகு ராணிப்போட்டி வைத்தால் சூரியகாந்தி தான் வெற்றி பெறும். பூக்களில் தனித்தன்மையானது அது மட்டும் தான். கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்ட சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும். சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. ஆனால் காட்டுச் சூரியகாந்தி மட்டும் சூரியனை நோக்கித் திரும்பாது. சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு முழுமையான சூரியன் தேவை. அவை ஏராளமான பத்திரக்கலவையுடன் வளம்மிக்க, ஈரமான, நன்கு -வடிகட்டப்படும் மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வர்த்தகரீதியான பயிர்ச்செய்கையில்,. சூரியகாந்தி "முழுமையான விதை" (பழம்) சிற்றுண்டியாக விற்கப்படும். இதை பறவைகளுக்கான உணவாகவும் விற
Comments
Post a Comment