அவளில் அவள்கள்

திரை-கதை-தொடர் -பகுதி 1 


அன்று -
கார்லோட்டா .
பேரழகி
வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் .
காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள். 
 ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை .

ஒருநாள்
அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் .
குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள்
தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் .

இன்று
Madeleine
தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் .
அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள்
அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள்.
கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் .
அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள்
இது அவளது தினசரி வழக்கம் .

ஒரு திரைக்கதையின் மிகவும் சிறு பகுதி
எத்தனை எத்தனை திரைக்கதைகள் இதிலிருந்து பிறந்து விட்டன
நம்மில் Carlotta-Madeleineகள் உலவித்திரிகிறார்கள்.
ஒன்றின் உயிர்ப்பு.... இன்னொரு பிரசவம்
மெடலின்-ஜூடியை விட இந்த கார்லோட்டா என்னுள் எஞ்சுகிறாள்.
கெவின் தூக்கி எறியும் பெண்ணை பார்க்கையில் ஏனோ கார்லோட்டா மரணம் தற்கொலையா
என்பதில் கேள்வி வருகிறது.
ஓவியங்களும் பெரும்பாலும் உண்மை போல உயிர்ப்பெறுவதில்லை.

Vertigo

Comments

Popular posts from this blog