மௌனவிழிகள்


வழிப்புரியாத விழிப்பார்வைகள்
காத்திருகின்றன
மனதின் ஜன்னல்கள்
திரைமூடி திறந்திருக்கின்றன
உனக்காக

எப்போதும்
நீ நின்ற இடம்
நிலைத்த புள்ளியாய்
அதன் குவியங்களில் குடியிருக்கின்றாய் நீ..
இடம்பெயர மறுக்கும் என் விழிவேர்கள்
வேரின் தேடலில் கண்ணீரும் கனவுகளும் உரங்கள்

ஒலியளவு செவிகளுக்கு மட்டுமா ?
மனதிற்கும் தான்...
பேசா மடந்தைகளின் பேசும் விழி மொழிகள்
கேட்பதில்லை யாருக்கும்
மனம் திறக்காதவரையில் ....
மூடப்படாது
மௌனவிழிகள்

Comments

  1. "பேசா மடந்தைகளின் பேசும் விழி மொழிகள்
    கேட்பதில்லை யாருக்கும்
    மனம் திறக்காதவரையில் ....
    மூடப்படாது
    மௌனவிழிகள்" meaning full for every words,keep it up bavi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்