Posts

The Reader

Image
சிறை வாசகி ! We're changing the order we do things. Read to me first, kid. Then we make love. தனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா , பதினாறு வயது கொண்ட மைக்கல் . இருவருக்குமிடையிலான சந்திப்பு காமத்தில் நுழைகிறது. அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள் அன்பு செலுத்துகிறாள். அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம். மைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது. ஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ சொல்லாது சென்று விடுகிறாள். சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல் கோர்ட்டுக்கு வருகிறான் பிரபலமான வழக்கு அங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா . வழக்கின் பல கட்டங்களில் மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது அவள் அதை வெளிப்படுத்துவதில்லை நீதிமன்றத்திலும் அதை அவள் மறைத்துவிட குற்றவாளியாக சிறை செல்கிறாள். காலம் மாறுகிறது விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம் . புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா, சிறை நூலகத்தில் புத்தகங்களை எடு...

A Fighter's Blues

Image
தோற்றுப்போனவனின் கதை what's the most difficulty being a boxer? it is how to win boxer என்பதை தாண்டி பல சந்தர்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஜெயித்தல்/வெற்றிபெறுதல் என்றால் என்ன ? எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம்? வெற்றி என்பது பணம்,அடையாளம்,புகழ் என்பதை தாண்டி வேறு எதுவுமே இல்லையா ? வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும் கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் ? தோற்றுபோனவர்களுக்கு பின்னே தோற்கடிக்கப்பட்ட கதைகளும் மறைந்துதானே இருக்கின்றன. அதுபோன்ற உலகமறியா கதைக்கு சொந்தக்காரனின் வாழ்க்கை A Fighter's Blues. ANDY குத்துசண்டை வீரன் , அவனை பேட்டி எடுக்க வந்த பெண்ணோடு காதல், ஒரு குத்துசண்டை போட்டி மாட்ச் பிக்சிங்கில் அவன் தோற்றுபோக வேண்டும். அவனது நிலையை பார்த்து காதலி வருந்த இயலாமையிலும் அவமானத்திலும் துடித்துபோகும் ANDY, ஒரு கட்டத்தில் சக போட்டியாளனை அடிக்க அவன் இறந்துவிடுகிறான். ANDYக்கு சிறை தண்டனை கிடைகிறது. பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து திரும்புபவன் காதலியை தேடிப்போகிறான். காதலி என்றோ இறந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவ...

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

Image
நாடு திரும்ப இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தநிலையில் பொருட்கள் வாங்க chinatownல் உள்ள Petaling Street Marketக்கு வந்தோம் பொருட்கள் வாங்கிகொண்டிருக்கையில் திடிரென்று மழை பெய்யவே அம்மாவையும் சித்துவையும் பேருந்து தரிப்பிடத்தில் அமர சொல்லிவிட்டு அருகிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றேன். இருபது நிமிடங்களில் திரும்பிவந்தால் , சித்துவோடு ஒரு வெள்ளைக்கார நடுத்தரவயது மனிதர் சிரித்துகொண்டிருந்தார். நான் வந்ததும் அம்மா,என்னை மகள் என்று அறிமுகப்படுத்தினார். புன்னகையோடு பேச்சை ஆரம்பித்தார். ஐரோப்பியர் அல்ல அமெரிக்கர் என்பதை அவருடைய ஆங்கிலம் உணரவைத்தது. சித்துவின் கண்கள் மிக வசீகரமாக உள்ளதாகவும் அழகான பையன் என்று கூறிவிட்டு என்னைப்பற்றி கேட்டார். என் விபரங்களையும் தொலைக்காட்சி பணிபற்றியும் கூறினேன். நான் அவர் பற்றி கேட்க , தான் ஒரு இஸ்லாமியன் என்றும் வங்கி ஊழியன் என்றும் கூறினார். அமெரிக்காவில் தன்னால் வசிக்க முடியவில்லை, நிறைய பிரச்னைகள் இஸ்லாமிய நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து மலேசியா வந்துவிட்டதாக கூறினார். சொல்லும்போதே சற்று குரல் தளர்ந்துவிட்டது. அத...

கடனாய் கொஞ்சம் நன்றிகள்

Image
பினாங்கிலிருந்து நீண்ட பஸ்பயணம் முடிந்து, கோலாலம்பூர் வந்துவிட்டோம். எங்களுக்கான தங்குமிடம் Sentulலில் இருக்க, கோலாலம்பூரில் இருந்து ரயிலில் Sentul செல்ல வேண்டும். மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன தம்பி சித்துவின் நச்சரிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியது. அம்மாவை தூக்கிபோகச்சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். உடல்நலக்குறைவோடுடிருந்த அம்மாவும் மூச்சிரைக்க சித்துவை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். 3 பெரிய லக்கேஜ்களை நான் தூக்கிச்செல்ல வேண்டும் . இருபத்தி ஐந்து கிலோவிற்கும் மேல் பாரம் என்பதால் மெல்ல மெல்ல நடக்க வேண்டிய நிலை. அங்கிருந்து இங்குமாய் இங்கிருந்து அங்குமாக அலைச்சல் வேறு. எங்களோடு வந்த தோழிகளோடு அம்மாவை போக சொல்லிவிட்டு நான் மெல்ல வருகிறேன் என்று லக்கேஜோடு நடக்க ஆரம்பித்தேன். எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை,படியால் இறங்க வேண்டும். எல்லோரும் இறங்கிவிட்டனர்.நான் மேலே நிற்கிறேன். 3 லக்கேஜ்களை சுமந்து படியிறங்க முடியவில்லை. பின்னால் நின்ற பயணிகள் சத்தமிட தொடங்க அவர்கள் இறங்க வழிவிட்டு ஒதுங்கி நிற்க , பயணிகள் எரிச்சலோடு என்னை கடந்து செல்லத்தொடங்கினார்கள். ர...

A Question of Silence

Image
அமைதியின் வன்முறை  ‘’நீ எவ்வளவு பெரிய சைக்கார்ட்டிஸ்ட், அவங்க சாதாரண பெண்கள்;இது ஒரு நார்மல் கேஸ்’’   ‘’அதான் என் பிரச்சனை,  அவங்க ரொம்ப சாதாரண பெண்கள்.  தினமும் கடைல,தெருவுல பார்க்குற சராசரி பெண்கள்.  இந்த பொண்ணுங்ககிட்ட இருந்து என்னால  உண்மைய பேச வைக்க முடியல;அதான் என் பிரச்னை’’ மனநல மருத்துவர் Cox Habbema, தன் கணவனிடம் கோபமும் இயலாமையுமாக பேசும் இடத்தில் இயக்குனர் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார். 3 பெண்கள் உணவகத்தில் பணிபுரியும் தனிமையில் வாழும் வயதான பெண். கணவன் குழந்தை சகிதம் குடும்ப வாழ்வில் ஈடுபடும் நடுத்தரவர்க்க பெண். பெரிய நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றும் இளம்பெண்.  ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற இந்த மூவரும் ஒரு ஆடைக்காட்சியறையின் உரிமையாளரை அடித்துக்கொலைசெய்கிறார்கள் . போலிஸ் விசாரணையில் கைது செய்யப்படும் இந்த மூவரிடமும் பேசி. அவர்களின் மனநிலை தொடர்பான தெளிவான விளக்கத்தை அளிக்கும் பொறுப்பு மனநலமருத்துவர் Cox Habbemaவிடம் தரப்படுகிறது. ஒருத்தி பேச மறுக்கிறாள், இன்னொருத்தி வெகுளித்தனமாக பேசுகிறாள். மற...

அவளில் அவள்கள்

Image
திரை-கதை-தொடர் -பகுதி 1  அன்று - கார்லோட்டா . பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள்.   ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை . ஒருநாள் அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் . இன்று Madeleine தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் . அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள். கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் . அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் . ஒரு திரைக்கதையின் மிக...

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....

Image
''உயிரே''   காதல் கதைகள்- பகுதி 1 நான் தேநீர் விரும்பியல்ல. தேநீர் போலவே எனக்கு காதலும்  :) காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன. மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் .... ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே ) ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும். உயிரேயின் அரசியல் தவிர்த்து அதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை உலகத்திலேயே மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது. நான் ஆரம்பிக்கிறேன்  :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ? ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை எல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன். எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன். எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம் அன்றைய ஷாருக்கினுடையது. அசட்டை ந...