உழைப்பாளர் தினம் வாழ்த்து சொல்றவங்களும் வசை பாடுறவங்களும் இரண்டு தரப்புமே தங்களோட கருத்தை சொல்றாங்க உழைக்கிற எங்களுக்கு எல்லா நாளுமே எங்க தினம் தான் என்ன தொழில் என்ன பதவி எவ்வளவு சம்பளம்னு பாகுபட்டோட தானே உழைப்பாளர்களை வரையறுக்கிறோம் ? இன்னைக்கு அதை மறந்தாலும் பாக்கி இருக்குற 364 நாட்களும் அதை யோசிக்கிறோம் தானே ? பணம்- பதவி அடிப்படைல தானே நம்ம உழைப்பு மதிக்கபடுது ? அந்த எண்ணத்துல இருந்து விடுபட்டவங்க நம்மில் எத்தனை பேர் ? சொல்லபோனா எனக்குளேயே அந்த மாற்றம் முழுமையா நிகழலை நான் அதிகம் ஆச்சர்யபடுறதும் மதிகிறதும் சாக்கடை பணியாளர்களை தான் . வறுமை அவர்களது பணிக்கு காரணமா இருந்தாலும் அதை செய்ய முனையுற தைரியமும் சமுகத்தால ஒதுக்கபடுவதை ஏற்றுகொள்ற நிலையும் அசாத்தியமானது நம்ம உடல் கழிவுகளை நாமே பார்த்து அருவருக்கும் போது அதை அப்புறப்படுத்தும் மனிதர்கள் எப்படிபட்ட மனிதர்கள் ? அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் ? கழிவுகளோட கழிவுகளாக அவங்கள புறக்கணிக்கிறதை தவிர்ப்போமே அவங்க இல்லாட்டி நாம வாழ வழி இருக்காது .... முதல்ல அவங்களை கௌரவிப்போம் குறைந்த பட்சம் ஒதுக்கமால் அவமரியாதைக்...
Popular posts from this blog
தேடலற்ற கனவுலகம் - இலங்கை தமிழ்சினிமாவின் எதிர்காலம்
ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது. உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை தமிழ் சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும் புலப்படும். இலங்கை சினிமாவின் முடக்கத்துக்கு போர் மற்றும் இனப்பிரச்சினையை காரணமாக கூறுவது சில தரப்பின் கடமையாகவே இருகின்றது. உலக அரங்கில் போர் என்பது சினிமாவின் மாபெரும் வியாபார தளம். இரண்டாம் உலகப்போ...
பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு தன்னந்தனியே நிற்கின்றேன் நான் தலைக்கு மேலே தெரியும் வானம் என் மனதைப்போல முற்றிலும் வெறுமையாய் ... காலணிகளை துறந்து வெற்றுக்கால்களில் நிற்கின்றேன் நான் காய்ந்து போய் குத்தும் மணல்கள் வலிக்கிறது இதயத்தில் .... என் இயலாமையில் நிறையும் வாழ்க்கை நிரப்பபடாத இந்த கானகத்தில் ? என தேடி அலைகின்றேன் நான் .... நான் தேடி அலைவது என்னை எனக்கான அடையாளத்தை அடைவேனா என்னை ? நரமயமாக்களில்... தாராளமயமாக்கலில் ... உலகமயமாக்களில் ... ஆட்பட்டு போன உங்களுக்கு காடு என்பதன் பொருள் என்ன ? வெறும் மரம் சூழ்ந்த பகுதியல்ல காடுகள் பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ வாழத்தகுதியற்ற உறைவிடமோ அல்ல காடுகள் ... பல்லாயிரம் வருடமாய் செழித்து நெடிந்துயர்ந்து வான்தொட்டு நிற்கும் மரங்களும் செடிகொடி தாவரங்களும் இருவாச்சிகள் இரவாடிகள் இறைச்சி உண்ணிகள் பெரிய காட்டுயிர்களும் புழு பூச்சிகள் பறவைகள் நீருயிர்கள் என இயற்கை கூறுகள் அனைத்தும் இணைந்த எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதரமான அற்புத கட்டமைப்பே காடு அதுவே எங்கள் வீடு காடு அது தனி உலகம் உயிரோட்டமாய் வ...

Comments
Post a Comment