கடலின் ராஜவில்லன்கள் பெயரிலேயே சிங்கத்தை வைத்திருக்கிற இந்த மீன்கள் கடலின் ராஜாவாக உள்ள அதே வேளை வில்லனாகவும் இருக்கிறது. பசிஃபிக் சிங்க மீன் (Pacific lionfish) என்று அழைக்கப்படுற இந்த வகை மீன்கள், பெரும்பாலும் பசிஃபிக் கடல்களில் வாழ்வதாலும், உடல் முட்களை விரிக்கும்போது சிங்கம் போன்ற தோற்றத்தினை ஒத்து இருப்பதாலும் இவற்றுக்கு "பசிஃபிக் சிங்க மீன் "என்று பெயர் வந்ததாக சொல்ல படுகிறது. அலங்கார மீன்களில் அதிக விலைக்கு போகும் மீன் இனம், பார்ப்பதற்கு மிக அழகாகவும் ரம்மியமாகவும் காட்சி அளிக்கும். உடல் முழுவதும் ஒரு வித விஷமுட்களையும், எதிரி/உணவைத் தாக்கும்போது அம்முட்களை அகல விரித்துத் தாக்கும் தன்மையும்கொண்ட, ஒரு வகை அசைவ உயிரினங்களாகும். மேற்கு பசுபிக் கடல்தான், இந்த அரிய வகை மீன்களின் வாழ்விடமாக உள்ளன .பெரும்பாலும் பசிஃபிக் கடலில் இருந்தாலும், கடந்த 1990ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா முதல் ரோட் தீவுவரை (Florida to Rhode Island) உள்ள கடல்பகுதிகளில் காணப்பட்டன. இதன் இனப்பெருக்கம் மிக வேகமாக பல்கிப் பெருகி வருகிறது. கரீபியன் தீவு தென் அமெரிக்க கட...
Popular posts from this blog
அந்த நிமிடம்
சட்டென்று கடந்து போன நிமிடங்களில் தொலைந்த வார்த்தையை நினைவூட்ட தடுக்கிறது ஏதோ ஒன்று . புகைப்படத்தில் முகம் பதிக்க முன்னர் அசலான இந்த சலன முகம் யாருக்கு பிடிக்கும் ? தயக்கமும் கேள்வியும் மீளவும் தொடர்ந்த போது என்ன சொல்லியிருப்பேன் நான் ? ம்.....நினைவுகளின் நீட்சியில் ஒளிந்து கொண்ட வார்த்தையை கண்டெடுக்க ஒரு கணம் கொடு . மீண்டும் தொலைந்த வார்தைகளில் ஒளிந்து கொள்ள தயாராகிறேன்.
தேடலற்ற கனவுலகம் - இலங்கை தமிழ்சினிமாவின் எதிர்காலம்
ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது. உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை தமிழ் சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும் புலப்படும். இலங்கை சினிமாவின் முடக்கத்துக்கு போர் மற்றும் இனப்பிரச்சினையை காரணமாக கூறுவது சில தரப்பின் கடமையாகவே இருகின்றது. உலக அரங்கில் போர் என்பது சினிமாவின் மாபெரும் வியாபார தளம். இரண்டாம் உலகப்போ...

Comments
Post a Comment