மௌனவிழிகள் வழிப்புரியாத விழிப்பார்வைகள் காத்திருகின்றன மனதின் ஜன்னல்கள் திரைமூடி திறந்திருக்கின்றன உனக்காக எப்போதும் நீ நின்ற இடம் நிலைத்த புள்ளியாய் அதன் குவியங்களில் குடியிருக்கின்றாய் நீ.. இடம்பெயர மறுக்கும் என் விழிவேர்கள் வேரின் தேடலில் கண்ணீரும் கனவுகளும் உரங்கள் ஒலியளவு செவிகளுக்கு மட்டுமா ? மனதிற்கும் தான்... பேசா மடந்தைகளின் பேசும் விழி மொழிகள் கேட்பதில்லை யாருக்கும் மனம் திறக்காதவரையில் .... மூடப்படாது மௌனவிழிகள்
Posts
Showing posts from March, 2013
- Get link
- Other Apps
என் சிறுமழை ... ம் ... நான் தனித்திருக்கின்றேன்.... நிலவிரவுகள் நகரும் நேரம் நிலையின்றி ஓடும் மேகம் நிமிடங்களோடு கடக்கும் நினைவுகள் திமிரை தின்று தீர்த்த அனுபவங்கள் வேதனைகளை கரைக்க முயன்று தோற்றுப்போகிறேன் மீண்டும் மீண்டும் எப்போதும் பெருவெளிகளில் மௌனித்தே இருக்கின்றேன் என் மௌனத்தின் மொழியாய் உனக்கும் எனக்குமான இடைவெளியில் பொழிகிறது என் சிறு மழை ...
- Get link
- Other Apps
CZ12 தமிழில் அதிரடி சண்டைக் காட்சிகள் கொண்ட படம் என்ற பெயரில் வெளியாகும் படங்களை பார்த்தால் எரிச்சல் தான் வரும் . கோமாளித்தனங்களை சண்டை என்றும் சவுண்ட் எபெக்ட்களுடன் வெட்டு குத்துகளை அதிரடி என்றும் கூறும் போது எரிச்சல் மேலிடாமல் என்ன செய்யும் ? எப்பொழுது புருஸ்லி ,ஜாக்கி சான் படங்களை பார்க்க ஆரம்பித்தேனோ அப்பொழுதே எரிச்சல் நீங்கி சண்டை மீது ஒரு மரியாதையை கலந்த பற்று ஏற்பட்டு விட்டது . ரத்தம் கொட்டும் வன்முறை இல்லாத சண்டையை ஜாக்கியின் படங்களில் பார்க்க நேர்ந்தது . நகைச்சுவையுடன் அந்த காட்சிகள் நகர்ந்து செல்லும் விதம் நேர்த்தியாக இருக்கும். குறித்த காட்சியின் போது சண்டை போடும் சூழல்நிலையில் பக்கத்தில் இருக்குற பொருட்களை பயன்படுத்தி சண்டை போடும் அழகை ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன் . ஜாக்கி டூப் போடுவதில்லை என்று தெரிந்த போது ஜாக்கி மீதான அன்பு அதிகரித்தது . படம் முடிந்ததும் படத்துக்காக ஜாக்கி பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது மரியாதைக்குறிய நடிகனாக மாறிப் போனார் . சிறுவயதில் ஜாக்கி படங்களின் சண்டைக் காட்சிகளை பார்த்து விட்டு
- Get link
- Other Apps
பாதம் பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் தினமும் 10அல்லது12 பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நீங்கள் உற்சாகத்தையும் உடல் நலத்தையும் பெறலாம். கொஞ்சம் கூடுதல் செலவு என்றாலும் ஆயுள் நீடிப்பது உறுதி. இதில் அதிகம் கல்சியம் உள்ளதால் ஒல்லியான பெண்கள் எலும்பு மெலிவு நோயில் விழுந்து விடாமல் பாதுகாக்கும். பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநிரகத்தையும் பாதுகாக்கும் பொஸ்பரஸ் உப்பு கல்சியத்தை விட இரு மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது. கொழுப்பு சத்து அதிகமுள்ள பாதாம் பருப்பு இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்ட்ரோல் அளவை குறைகிறது. நல்ல கொலஸ்ரோலை அளவுடன் இருக்க உதவுகிறது. பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, ஜீரண சக்தியை அதிகபடுத்தும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு. பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அ
- Get link
- Other Apps
மருதாணியின் மகிமை இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது.பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வ
- Get link
- Other Apps
நாகலிங்க பூ உலகம்முழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக வணங்கப்படும் பூக்கள் தான் நாகலிங்கப் பூக்கள். ஏன் என்றால் இதன் அமைப்பு ஒரு ஆன்மிக அதிசயம் பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள் அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும். இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும்அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாகும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களில
- Get link
- Other Apps
ரோஜாபூ உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த மலர் ரோஜா. அழகிற்கு ரோஜாவைதான் ஒப்பிடுவார்கள். அழகை அதிகரிக்கவும் ரோஜாவைத்தான் பயன்படுத்துவார்கள். 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப் பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது. ரோஜா பூவானது, ரோசா மரபின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகையை சேர்ந்தது. இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறுமணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன. இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படு
- Get link
- Other Apps
சூரியகாந்தி பூ உலகத்தில் எத்தனை பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு நிகர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பூக்களுக்கு அழகு ராணிப்போட்டி வைத்தால் சூரியகாந்தி தான் வெற்றி பெறும். பூக்களில் தனித்தன்மையானது அது மட்டும் தான். கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்ட சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும். சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. ஆனால் காட்டுச் சூரியகாந்தி மட்டும் சூரியனை நோக்கித் திரும்பாது. சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு முழுமையான சூரியன் தேவை. அவை ஏராளமான பத்திரக்கலவையுடன் வளம்மிக்க, ஈரமான, நன்கு -வடிகட்டப்படும் மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வர்த்தகரீதியான பயிர்ச்செய்கையில்,. சூரியகாந்தி "முழுமையான விதை" (பழம்) சிற்றுண்டியாக விற்கப்படும். இதை பறவைகளுக்கான உணவாகவும் விற
- Get link
- Other Apps
தர்பூசணி தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் C அதிகம் உள்ளது. நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு ஐஸ் கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும். பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும். தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்பாக
- Get link
- Other Apps
கடுகின் மருத்துவ பயன்கள் கீழைத்தேய வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை.நம் சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது கடுகில் மூன்று வகை உண்டு. சிறிய செங்கடுகு (கருங்கடுகு), பெரிய செங்கடுகு, வெண் கடுகு. கடுகில்லாமல் நமது சாம்பார், ரசம், களி இவை முழுமையான சுவையை பெறாது. பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிக்கிறது. கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. முக்கியமாக மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் பாதுகாப்பு அளிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிள
- Get link
- Other Apps
ரம்புட்டான் எத்தனையோ பழங்கள் இருந்த போதும் ரம்புட்டான் மட்டும் வித்தியாசமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழமரத்தாவரம். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் , தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதேபோன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் . July மாதம் இந்த பழ சீசன் ஆகும். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்த
- Get link
- Other Apps
நிறம் மாறும் மீன்கள் விலங்குகளில் நிறம் மாறுபவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னை பிற விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி பற்றி நாம் அறிவோம். செடிகொடிக்குள் நின்றால் தன் உடலை பச்சை, மஞ்சளாகவும், மரப்பட்டையில் நிற்கும்போது கருப்பும், காபி வண்ணமும் கலந்ததுபோல உடலின் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடும். ஆனால் இவை தரையில் நிறம் மாறுபவை கடலில் நிறம் மாறும் மீன்கள் பற்றி அறிவிர்களா? கடலில் வாழும் மீன் இனங்களில் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நிறம் மாறும் மீன்களில் முக்கியமானது வேதாள மீன்கள் மற்றும் இலை மீன்கள். இவை இரண்டும் மிக விந்தையான உடலமைப்பைப் பெற்ற மீன்கள். எதிரி மீன்களிடம் இருந்து தப்பிக்க சிறப்பு அமைப்புகளைப்பெற்றுள்ள இம்மீன்கள், பச்சோந்திகளைப் போல நிறம் மாறக்கூடியவை. இவற்றை மீன் என்று யாரும் எளிதில் கண்டுபிடித்து விட முடியாத அளவில் தன் தோற்றத்தையும் நிறத்தையும் மாற்றக்கூடியவை. இலை மீன், இலை போன்ற வடிவத்திலும், நிறத்திலும் காணப்படும். இலை போன்ற உடலமைப்பையும், இலையின் நரம்புகள் போன்ற வண்ண
- Get link
- Other Apps
கடலின் ராஜவில்லன்கள் பெயரிலேயே சிங்கத்தை வைத்திருக்கிற இந்த மீன்கள் கடலின் ராஜாவாக உள்ள அதே வேளை வில்லனாகவும் இருக்கிறது. பசிஃபிக் சிங்க மீன் (Pacific lionfish) என்று அழைக்கப்படுற இந்த வகை மீன்கள், பெரும்பாலும் பசிஃபிக் கடல்களில் வாழ்வதாலும், உடல் முட்களை விரிக்கும்போது சிங்கம் போன்ற தோற்றத்தினை ஒத்து இருப்பதாலும் இவற்றுக்கு "பசிஃபிக் சிங்க மீன் "என்று பெயர் வந்ததாக சொல்ல படுகிறது. அலங்கார மீன்களில் அதிக விலைக்கு போகும் மீன் இனம், பார்ப்பதற்கு மிக அழகாகவும் ரம்மியமாகவும் காட்சி அளிக்கும். உடல் முழுவதும் ஒரு வித விஷமுட்களையும், எதிரி/உணவைத் தாக்கும்போது அம்முட்களை அகல விரித்துத் தாக்கும் தன்மையும்கொண்ட, ஒரு வகை அசைவ உயிரினங்களாகும். மேற்கு பசுபிக் கடல்தான், இந்த அரிய வகை மீன்களின் வாழ்விடமாக உள்ளன .பெரும்பாலும் பசிஃபிக் கடலில் இருந்தாலும், கடந்த 1990ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா முதல் ரோட் தீவுவரை (Florida to Rhode Island) உள்ள கடல்பகுதிகளில் காணப்பட்டன. இதன் இனப்பெருக்கம் மிக வேகமாக பல்கிப் பெருகி வருகிறது. கரீபியன் தீவு தென் அமெரிக்க கடற்பகுதிகள